Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தன.
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
இதில் குதிரைகள், பசுமாடுகள் உள்பட பக்தர்கள் மஞ்சள் ஆடையுடன் பங்கேற்று தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் முதல் கால யாக சாலை பூஜை துவங்கியது.
மூன்றாம் கால யாக சாலை பூஜைகளுக்கு பின் காலை 07:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவையொட்டி பட்டத்தரசியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.